மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைவெய்தியது தமிழ்நாட்டுக்குப் பேரி ழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக் கத்தைச் செலுத்துகிறோம்.
பகத்சிங் தூக்கில் இடப்பட்ட செய்தியை அறிந்து தமிழ்நாட்டில் வெடித்த போராட்டங்களில் தனது ஒன்பதாவது வயதிலேயே பங்கேற்றவர் தோழர் சங்கரய்யா அவர்கள். கல்லூரி மாணவராக இருந்தபோது அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதனால் அவரது பட்டப்படிப்பு முழுமை பெறாமல் நின்று போனது. பல மாதங்கள் சிறையிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி தனது போராட்ட வாழ்வில் சுமார் 9 ஆண்டு காலம் அவர் சிறையில் கழித்திருக்கிறார்.
மக்கள் போராட்டங்களில் என்றைக்கும் முன்ன ணியில் நின்றவர். எளிய வாழ்க்கை, சமரசமற்ற கொள்கைப் பற்று, அடக்குமுறைக்கு அஞ்சாத போர்க்குணம் ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தவர்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலை வர்களோடு அரசியல் பணியாற்றியவர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றிப் போராடியவர்.
தோழர் சங்கரய்யாவின் பணிகளை அங்கீ கரிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் தோழர் சங்கரய்யா அவர்களு க்குத் ‘தகைசால் தமிழர்’ என்கிற விருதினை அளித்துப் பெருமைப்படுத்தினார். அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க எடுக்கப்பட்ட முயற்சி சுதந்திரப் போராட்டத்தின் பெருமை அறியாத ஆளுநரால் தடைபட்டுப் போனது.
தோழர் என். சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது நினைவாக சென்னையில் மணி மண்டபம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
தொல்.திருமாவளவன்,
நிறுவனர், தலைவர், விசிக